அமைச்சர் ரிஷாத்  பதி­யுதீன் மற்றும் ஆளு­நர்­க­ளான அஸாத் சாலி, ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரை பத­வி­யி­றக்க வேண்டும்.  ஹிஸ்­புல்லாஹ் தேர்­தலில் தோற்று, தேசிய பட்­டி­யலில் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து பின்னர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் இன்­ற­ளவில் இலங்­கையில் ஒரு அரே­பி­யாவைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்­கிறார். எம்மால் இத்­த­கைய அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. 

நாடு குறித்து சிந்­திக்­கின்ற முஸ்­லிம்கள் இவற்­றுக்கு எதி­ராகக் குரல்­கொ­டுக்க வேண்டும் என்று நாங்கள் கோரு­கின்றோம். உங்­க­ளது சமூ­கத்­திற்குள் காணப்­ப­டு­கின்ற கொடூ­ரத்­தன்மை குறித்து நீங்கள் பேச­வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்­துள்ளார்.  சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள நேர்­காணல் ஒன்­றி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அதில் அவர் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது,

கேள்வி : சிங்­கள உறு­மய, ஜாதிக ஹெல­உ­று­மய போன்ற சிங்­கள இன­வாதக் கட்­சி­களின் உரு­வாக்­கத்தில் முன்­நின்று செயற்­பட்ட உங்­க­ளுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் பேசு­வ­தற்கு உரிமை இருக்­கின்­றதா?

பதில் : நாட்டில் விடு­தலைப் புலி­களின் தீவி­ர­வா­தத்தைத் தோற்­க­டிப்­ப­தற்கு நாங்கள் செயற்­பட்­ட­மையை இன­வாதம் என்று சிலர் வரை­ய­றுக்­கலாம். ஆனால், அப்­போது நாட்டின் தேசி­யத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யேற்­பட்ட போதும் நாம் அந்தக் கட­மையை செய்தோம். அதே­போன்று தற்­போது தோன்­றி­யுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராக செயற்­பட வேண்­டிய தேவை­யுள்­ளது. அதி­லி­ருந்து எவரும் விடு­பட முடியும் என்று நான் கரு­த­வில்லை.

கேள்வி : அவ்­வா­றெனின் வர­லாற்றில் நீங்கள் தவ­றி­ழைக்­க­வில்­லையா?

பதில் : வர­லாற்றுத் தேவையின் நிமித்தம் ஜாதிக ஹெல­உ­று­மய தோற்­று­விக்­கப்­பட்­டது என்றே நான் நினைக்­கின்றேன். அது ஒரு இன­வாதக் கட்சி என்று கூறு­வதை நான் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன். இலங்கை சர்­வ­தேச ரீதி­யாக சிறு­பான்­மை­யி­னரைப் பலப்­ப­டுத்தி, நாட்டின் பிர­தான இனக்­கு­ழு­மத்தை பின்­தள்­ளி­யி­ருந்த ஒரு­பின்­ன­ணி­யி­லேயே ஜாதிக ஹெல­உ­று­மய தோற்றம் பெற்­றது. எனவே அது சிங்­க­ள­வர்­களின் நிமித்தம் உரு­வாக்­கப்­பட்ட கட்­சி­யல்ல. மாறாக இந்­நாட்டு உரி­மை­யா­ளர்­களின் நிமித்தம் உரு­வாக்­கப்­பட்­ட­ தாகும்.

கேள்வி : இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இஸ்­லா­மிய வஹா­பி­ஸத்தின் நிலை எத்­த­கை­ய­தாக இருக்­கின்­றது?

பதில் : இவ்­வி­டயம் தொடர்பில் எமது நாட்டின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எவ்­வித தெளிவும் காணப்­பட­வில்லை. எது­வித தேசிய கொள்­கையும் இருக்­க­வில்லை. நாடு, நாட்டின் எதிர்­கால பாது­காப்பு, நாட்டின் வர­லாற்று ரீதி­யான மர­பு­ரிமை ஆகி­ய­வற்றைப் பாது­காப்­பதை நோக்­காகக் கொண்டு தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்குப் பதி­லாக நாங்கள் மேற்­கொண்ட அர­சியல் ரீதி­யான தீர்­மா­னங்கள் இந்­நி­லைக்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­துள்­ளன.

கேள்வி : மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு நிதி வழங்கி போஷித்­தார்கள் என்று தற்­போ­தைய அர­சாங்கம் கூறு­கி­றதே?

பதில் : ராஜ­பக் ஷ அர­சாங்கம் அவர்­க­ளுக்கு நிதி­ய­ளித்­தி­ருக்கும் என்­பதை என்னால் நம்­ப­மு­டி­யாது. ஆனால், ஒன்றை மாத்­திரம் கூற­மு­டியும். இப்­பி­ரச்­சி­னையின் பார­தூ­ரத்­தன்­மையை ராஜ­பக் ஷ

அர­சாங்கம் மிகச்­ச­ரி­யாகப் புரிந்­து­கொள்­ள­வில்லை. ஏனெனில் அவர்­க­ளது ஆட்­சிக்

கா­லத்தில் அடிப்­ப­டை­வா­திகள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில்  அனைத்துத் துறை­க­ளிலும் கால்­ப­தித்து, தமது தேவை­களை பூர்த்தி செய்து கொண்­டார்கள்.

கேள்வி : அதற்கு உதா­ர­ணங்கள் ஏது­மி­ருக்­கின்றதா?

பதில் : ரிஷாத் பதி­யுதீன் தான் அதற்கு மிகச்­

சி­றந்த உதா­ரணம். அவர் கடந்த அர­சாங்­கத்தின் காலத்­தி­லேயே இடங்­களை கைப்­பற்­றிக்­கொண்டார். கடந்த ஆட்­சியில் அரச இயந்­தி­ரத்­திற்கு அப்­பாற்­சென்று தன்­னிச்­சை­யாக தமக்­கான அதி­கா­ரங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு அவர்­களால் முடி­யு­மாக இருந்­தது. அதன் பார­தூ­ரத்­தன்­மையை மஹிந்த அர­சாங்கம் புரிந்­து­கொள்­ள­வில்லை.

கேள்வி : சிலர் சஹ்ரான் உள்­ளிட்­டோரை மதம் சார்ந்த அடிப்­ப­டை­வா­திகள் என்றே குறிப்­பி­டு­கின்­றார்கள். இது மத அடிப்­ப­டை­வா­தமா? அல்­லது அதையும் தாண்­டிய வேறு ஏதேனும் ஒன்றா?

பதில் : சஹ்ரான் உள்­ளிட்ட தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களின் செயற்­பா­டுகள் சர்­வ­தேச பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களின் ஓரங்­க­மாக இருக்­கலாம். நாட்­டிற்­குள்ளும் அதற்கு அவ­சி­ய­மான பின்­னணி காணப்­பட்­டது. சஹ்ரான் போன்­ற­வர்கள் உரு­வா­கு­வ­தற்கு அவ­சி­ய­மான மத­வாத அடிப்­படை மிகவும் சக்­தி­வாய்ந்த முறையில் கடந்த பல­வ­ருட கால­மாக நாட்­டிற்குள் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது என்றே நான் கரு­து­கின்றேன். ஆனால், இவ்­வி­ட­யத்தில் எமது அர­சி­யல்­வா­திகள் குரு­டர்கள் போன்றே செயற்­பட்­டனர்.

கேள்வி : அந்­த­ள­விற்கு பொறுப்­பற்ற விதத்தில் செயற்­பட்­டார்­களா?

பதில் :  ஆம். உதா­ர­ண­மாக மத­ரஸா பாடசாலைகளை எடுத்­துக்­கொள்­ளுங்கள். அவை முழு­மை­யாக சட்­ட­வி­ரோ­த­மா­னவை. இவை ஞாயிறு அற­நெறி பாட­சா­லைகள் அல்ல. மத­கு­ரு­மாரை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே இந்த மத­ரஸா பாட­சா­லைகள் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன.

இஸ்­லா­மிய மதம் அவ்­வாறு பெரி­ய­ளவில் மத குரு­மார்­களை உரு­வாக்கும் தேவை­யு­டைய மத­மல்ல. அவ்­வா­றி­ருந்தும் விசேட மத பாட­சா­லைகள் என்ற வகையில் அடிப்­ப­டை­வா­தி­களை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் மத­ரஸா பாட­சா­லைகள் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட போது நாம­் அனை­வரும் அமை­தி­யாக இருந்தோம்.

நாட்டின் தேசிய கல்­வித்­திட்­டத்தின் கீழ் மாண­வர்கள் கற்­க­வேண்டும் என்று கூறு­வது நியா­ய­மா­ன­தாகும். 1968 ஆம் ஆண்டு சட்­டத்தில் அனைத்து மாண­வர்­களும் நாட்டின் தேசிய கல்­வியை மாத்­தி­ரமே பெற­வேண்டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதனை மீறிய கல்­விச்­செ­யற்­பாடு நாட்டில் இருக்க முடி­யாது. தற்­போது இந்த மத­ரஸா பாட­சா­லை­களில் கல்­வி­கற்கும் மாண­வர்கள் எமது நாட்­டிற்குச் சொந்­த­மில்­லாத மாண­வர்­க­ளாவர். இந்த அடிப்­ப­டை­வாத

கல்­வி­மு­றையின் ஊடாக இது­வரை இலட்­சக் ­

கணக்­கான மாண­வர்கள் உரு­வா­கி­யி­ருக்­கி­றார்கள். நாடு குறித்த அபி­மானம், உணர்­வு­பூர்­வத்­தன்மை, நாட்டின் பிரஜை என்ற அடிப்­படை எண்ணம் என்­பன கல்­வியின் ஊடா­கவே கட்­டி­யெ­ழுப்­பப்­படு­கின்­றன. அந்தக் கல்­வி­முறைக் கொள்கை

பூர­ண­மாக வீழ்ச்­சி­ய­டை­வ­தற்கு  கடந்த காலத்தில் நாம் இடம்­வ­ழங்­கி­யி­ருக்­கிறோம்.

கேள்வி : குரு­ணா­கல் வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்­றிய ஷாபி என்ற வைத்­தி­யரின் செயற்­பா­டு­களும் இவற்றின் ஓர் அங்­க­மாக இருக்கும் என்று நீங்கள் கரு­து­கி­றீர்­களா?

பதில் : உண்­மையில் ஹிட்­லரின் வதை  முகாமில் இருந்த மொங்­கலே என்ற வைத்­தி­யரைப் போன்­றவர் தான் ஷாபி என்றே நான் கரு­து­கின்றேன். அந்த மொங்­கலே என்ற வைத்­தியர் செய்­ததை விட மிகவும் மோச­மான குற்­றத்தைத் தான் ஷாபி சஹாப்தீன் செய்­தி­ருக்­கிறார்.நான் உண்­மையைக் கூறு­கின்றேன். கடந்த காலத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு கருக்­க­லைப்புச் செய்யும்

வெ வ்வேறு செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன என்று கூறப்­பட்­ட­தல்­லவா? அவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெறும் வாய்ப்­பில்லை என்றே அப்­போது கரு­தினேன். நான் மிகவும் நடு­நி­லை­யா­கவே சிந்­தித்தேன். இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் நாம் போதிய அள­விற்கு ஆராய்ந்து பார்க்­க­வில்லை என்று தோன்­று­கி­றது.

கேள்வி : அந்த வைத்­தியர் திட்­ட­மிட்டு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட முறையில் செயற்­பட்­டி­ருப்பார்  என்று கரு­து­கி­றீர்­களா?

பதில் : ஆம்.. நிச்­ச­ய­மாக. அந்த வைத்­தியர் சுமார் இலட்சம் தாய்­மா­ருக்கு இத்­த­கைய பாவத்தைச் செய்­தி­ருப்பார் என்றே நான் நம்­பு­கின்றேன்.

கேள்வி : ஆனால் சட்­டத்­திற்கு முர­ணாக அதிக சொத்து சேர்த்­துள்­ளமை தொடர்­பி­லேயே குரு­ணா­கல் வைத்­தியர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். வேறு விட­யங்கள் பற்றி வெளி­யா­க­வில்­லையே?

பதில் : கைது செய்த பின்னர் தான் ஏனைய விட­யங்கள் அம்­ப­ல­மாகும். அந்த வைத்­தி­ய­ருக்கு இவ்­வ­ளவு பணம் எங்­கி­ருந்து வந்­தது என்று ஆராயும் போது சவூதி­அ­ரே­பி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

கேள்வி : அமைச்சர் ரிஷாத்  பதி­யு­தீ­னுக்கு எதி­ராகக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் நீங்கள் கையெழுத்திட்டிருக்கிறீர்களா?

பதில் : ஆம். கூட்டு எதிரணி தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்தது. நான் அதில் கையெழுத்திட்டது மாத்திரமன்றி, அதன் பொருட்டு சக்திமிக்க முறையில் போராடுகின்றேன். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடிந்ததே ஒருவித வெற்றிதான். குறிப்பாக ரிஷாத் பதியுதீன், அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரைப் பதவியிறக்க வேண்டும்.

ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் தோற்று, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றளவில் இலங்கையில் ஒரு அரேபியாவைக் கட்டியெழுப்பியிருக்கிறார்.

எம்மால் இத்தகைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாடு குறித்து சிந்திக்கின்ற முஸ்லிம்கள் இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். உங்களது சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொடூரத்தன்மை குறித்து நீங்கள் பேசவேண்டும். #ரிஷாத்பதியுதீன் #ஹிஸ்­புல்லாஹ்  #அத்­து­ர­லியேரத்னதேரர்

(நன்றி : லங்காதீப)

வீரகேசரி

(தமிழில் தனுஜா)