Home இலங்கை யாழ்.வல்வெட்டித்துறையில் போதை பொருள், பணம் மோட்டார் சைக்கிள் மீட்பு…

யாழ்.வல்வெட்டித்துறையில் போதை பொருள், பணம் மோட்டார் சைக்கிள் மீட்பு…

by admin

யாழ்.வல்வெட்டித்துறை காவற்துறைப்  பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதை பொருள், பணம் என்பன காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு காவற்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் வீதி சோதனை நடவடிக்கையில் காவற்துறையினர் ஈடுபட்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சந்தேகத்தில் மறித்து சோதனையிட முயன்ற போது ஒருவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். மற்றையவரை மோட்டார் சைக்கிளுடன் காவற்துறையினர்   கைது செய்தனர்.

கைதானவரை காவற்துறையினர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 500 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள், 4 மில்லி கிராம் கஞ்சா போதை பொருள், 7 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டது. அத்துடன் அவர்கள் பயணித்த சுமார் 6 இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் காவற்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை காவற்துறையினர்  காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை தப்பி சென்ற நபரே வடமராட்சி பகுதியில் போதை பொருள் கடத்தல் சூத்திரதாரி எனவும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். #யாழ்வல்வெட்டித்துறை #போதைபொருள் #ஐஸ்போதைபொருள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More