Home இலங்கை மாவிலாற்றில் வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தேன் – உண்ணாவிரத நிறைவில் ரத்ன தேரர்

மாவிலாற்றில் வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தேன் – உண்ணாவிரத நிறைவில் ரத்ன தேரர்

by admin



நாட்டுக்கானதொரு அதிர்ஷ்டான பூஜையினையே முன்னெடுத்திருப்பதாக கூறியுள்ள   அத்துரலியே ரதன தேரர்   30 ஆண்டு காலம் நாட்டில் காணப்பட்ட யுத்தத்தின் போது மாவிலாறு போராட்டத்திலிருந்து வெற்றி பயணத்தை ஆரம்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டுக்கு கடமைப்பட்டவனாக தாம் இல்லை என்றும் தனது இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க இங்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தமை அவரது ஆதரவாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியின் பதவிவிலகலையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட  அத்துரலியே ரதன தேரர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஜனாதிபதியால் நீக்க முடியாது என்றும் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானமெடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அத்துரலியே ரதன தேரரை உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#மாவிலாறு  #வெற்றிப் பயணத்தை #உண்ணாவிரத  #அத்துரலியே ரதன தேரர் 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More