Home இலங்கை மன்னாரில் விபத்து – பிறந்தநாளன்று இளைஞர் பலி

மன்னாரில் விபத்து – பிறந்தநாளன்று இளைஞர் பலி

by admin

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் இன்று வியாழக்கிழமை (6) மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த இன்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் எ.அசோக்குமார் (வயது-25) என தெரிய வருகின்றது. மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிரிதொரு நபரும் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த போது, குறித்த வீதியூடாக மன்னார் நோக்க பயணித்த பட்டா ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அசோக்குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி விக்கி (வயது-32) என்பவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்த குறித்த மன்னார் பொது வைத்தியசாலையின் நபர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பட்டா ரக வாகனத்தின் சாரதி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் மது போதையில் காணப்பட்டதாக தெரிய வருகின்றது. மேலதிக விசாரனைகளை மன்னார் பொது வைத்தியசாலை காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#மன்னார்  #விபத்து  #பலி  #பிறந்தநாள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More