Home இலங்கை போதை பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை தந்து உதவுமாறு கோரிக்கை

போதை பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை தந்து உதவுமாறு கோரிக்கை

by admin


போதை பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை தமக்கு தந்து உதவுமாறு தென்மராட்சி பிரதேச உதவி காவல்துறை அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக்க கோரியுள்ளார். போதை பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கொடிகாம காவல் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க தலைமையில் நேற்று முன்தினம் கொடிகாமத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

போதை பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளையோரை அதில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். கஞ்சா ஹெரோயின் போன்ற போதை பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன. அவற்றை விரைந்து தடுத்து நிறுத்த வேண்டும். அதன் முழுப்பொறுப்பும் ஒவ்வொருவரிடமும் உண்டு.

இளையோர் அதிகமாக போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். அதனை தடுத்து நிறுத்த வேண்டும். எனவே போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் எமக்கு தகவல் தாருங்கள். நாங்கள் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களை அதில் இருந்து மீட்டெடுக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த போகின்றோம். அதேவேளை போதை பாவனையில் இருந்து மீட்டெடுக்க அனைவரினது ஒத்துழைப்பும் எமக்கு தேவை என தெரிவித்தார்.

#போதை பொருள் பாவனை #அடிமையானவர்கள் #கோரிக்கை #ரஞ்சித் தசநாயக்க #விழிப்புணர்வு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More