Home இலங்கை 30 வருட யுத்தம் நடத்தி விட்டு இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம்

30 வருட யுத்தம் நடத்தி விட்டு இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம்

by admin


உங்­க­ளோடு 30 வரு­ட­மாக யுத்தம் செய்­தி­ருக்­கிறோம். உங்­களைப் புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காகப் பொறுப்­பேற்­றதன் பின்னர் உங்­க­ளிடம் நீங்கள் எங்கு இருந்­தீர்கள், எப்­பி­ர­தே­சத்தில் நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று நாங்கள் கேட்­ட­தில்லை. நீங்கள் யார் என்­ப­த­னை­யெல்லாம் மறந்­து­விட்டு நண்­பர்­க­ளாக, சகோ­த­ரர்­க­ளா­கவே பழ­கினோம் என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்­ப­கு­மார தலை­மையில் மாவட்ட செய­லக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளி­களின் குடும்­பங்­க­ளுக்கு தொழில், வாழ்­வா­தார உப­க­ர­ணங்கள் வழங்கும் நிகழ்வில்  உரை­யாற்றும்போதே அவர்  இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து உரை­யாற்­றிய அவர்,

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வு­பெற்று நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக ஆயத்­தப்­பட்டோம். யாழ்ப்­பா­ணத்தில் துரை­யப்பா கொல்­லப்­பட்­டதிலிருந்து தொடங்­கிய யுத்தம் 30 வரு­டங்கள் நடை­பெற்­றது. இந்த பத்து வரு­டத்தில் நாங்கள் பல்­வேறு முயற்­சி­களை  மேற்­கொண்­டுள்ளோம். அந்­த­வ­கையில் இங்­கி­ருப்­ப­வர்­க­ளோடு நேருக்கு நேராக சண்­டை­யிட்­டி­ருக்­கிறேன். உங்­க­ளோடு 30 வரு­ட­மாக யுத்தம் செய்­தி­ருக்­கிறோம். உங்­களைப் புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காகப் பொறுப்­பேற்­றதன் பின்னர் உங்­க­ளிடம் நீங்கள் எங்கு இருந்­தீர்கள், எப்­பி­ர­தே­சத்தில் நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று நாங்கள் கேட்­ட­தில்லை. நீங்கள் யார் என்­ப­த­னை­யெல்லாம் மறந்­து­விட்டு நண்­பர்­க­ளாக, சகோ­த­ரர்­க­ளா­கவே பழ­கினோம்.

நாட்டில் ஜே.வி.பி. யினு­டைய பிரச்­சினை இருந்த காலத்தில் அவர்­க­ளோடு சண்­டை­யிட்­டி­ருக்­கிறோம். பிடித்தோம், அழித்தோம். அதன்­பின்னர் நாட்­டுக்­காக அவர்­களைச் செயற்­ப­டுத்­தினோம்.  அவர்­க­ளோடு நன்­றா­கவே பழ­கு­கின்றோம். நாட்டின் சமா­தா­னத்­துக்­கா­கவே முப்­ப­டை­யி­னரும் பாடு­பட்டோம். அதற்­கா­கவே எல்­லோரும் உழைத்­தார்கள்.

தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் இணைந்து வாழக்­கூ­டிய மாவட்­ட­மாக திரு­கோ­ண­மலை மாவட்டம் இருக்­கி­றது. யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் புனர்­வாழ்­வ­ளிப்பின் பின்னர் பல்­வேறு உத­வி­களை எமது பணி­ய­கத்தின் ஊடாக மேற்­கொண்டு வரு­கிறோம்.

சிறு­வ­யதில் யுத்­தத்­திற்குச் சென்­ற­போது, பெற்­றோரை, தாய், தந்­தை­யரை இழந்­தீர்கள், கல்­வியை இழந்­தீர்கள், இப்­போது படிப்பு இல்­லாமல் போயி­ருக்­கி­றது, வீடு வாசல் இல்­லாமல் போயி­ருக்­கி­றது. அவற்­றை­யெல்லாம் மீண்டும் ஏற்­ப­டுத்தித் தரு­வ­தற்­காக ஆயத்­த­மா­கி­யி­ருக்­கிறோம்.

யுத்தம் முடிந்து பத்து வரு­டங்­க­ளா­கி­விட்­டன. நாம் எல்­லோரும் இந்­தப்­பி­ர­தே­சத்தை எவ்­வாறு அபி­வி­ருத்தி செய்­வது என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும். நாங்கள் முன்னர் எப்­ப­டி­யி­ருந்தோம், பின்னர் என்ன நடந்­தது. இனி­வரும் காலத்தில் என்ன தேவை என்­பது பற்றி நாம் எல்­லோரும் மன ஒரு­மைப்­பாட்­டுடன் செயற்­பட வேண்டும்.

2014 -17ஆம் ஆண்­டு­களில் 10 மில்­லி­யனுக்கும் அதி­க­மான பல்­வேறு உத­வி­களைச் செய்­தி­ருக்­கிறோம். திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள 550 புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட குடும்­பங்­களும் பயன்­பெறும் வகையில் 16 லட்சம் ரூபாவை இந்த வருடத்தில் செலவிட்டுள்ளோம். அத்தோடு அரசாங்க அதிபரூடாகவும் 3 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்குவதற்காக கையளித்துள்ளோம். அதன் ஊடாகவும் பல்வேறு உதவிகள் வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்தும் உங்களது மேம்பாட்டுக்காக உதவிகளைப் புரிவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றார்.

#யுத்தம்   #நண்பர்களாக #ஜானக ரத்­நா­யக்க #முன்னாள் போரா­ளி­கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More