Home இலங்கை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்து வைப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்து வைப்பு

by admin

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமான புதிய வாழ்வு நிறுவனம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  குறித்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் தொழில் பயிற்சி நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர்
முப்பது வருடமாக எமது நாட்டில் இடம்பெற்ற தொடர் யுத்தம் சாதாரணமக்களின் வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சவால்களிற்கு முகம் கொடுக்கும் வகையில் நவீன வசதி வாய்ப்புக்களை அரசின் ஊடாகவும், வெளிநாடுகளின் உதவிகளின் ஊடாகவும் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் எதுவித உதவிகளோ, அனுசரணைகளோ அற்ற நிலையில் மூன்று வேளை உணவுக்குக்கூட சிரமப்படுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கின்றோம்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பல முறை பேசிய பேசி வந்திருக்கின்றேன். ஆனால் வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளை போன்றே மாறி மாற வந்த அரசாங்கங்கள் நடாத்தின. மேலும் சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசு தடுத்ததாகவும் சி வி விக்னேஸ்வரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சமகால அரசியல் தொடர்பில் அவரிடம் வினவிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்திருந்தார்.

#யுத்தத்தால்  #பாதிக்கப்பட்ட #பெண்களிற்கான  #இலவச  #தொழிற்பயிற்சி நிறுவனம் #சி வி விக்னேஸ்வரன்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More