Home உலகம் மெக்சிகோவில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

by admin

மெக்சிகோவில் இனந்தெரியாதோரால் பெண் பத்திரிகையாளரான நோர்மா சராபியா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்த இவர் அங்கு நடைபெறும் கொலை, ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பத்திரிகையில் எழுதிவந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத இருவர் அவர்மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது பத்திரிகையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் கொலையாளிகள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகிலேயே பத்திரிகையாளர்கள் அதிக அளவில் கொல்லப்படும் நாடான மெக்சிகோவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 2000-ம் ஆண்டு முதல் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  #Journalist #Norma Sarabia #mexico #மெக்சிகோ  #பெண் பத்திரிகையாளர் #சுட்டுக்கொலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More