Home இலங்கை பாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு

பாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு

by admin

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலைக்குரிய அரச காணியை அடாத்தாக பிடித்து தொழில் நடாத்திவருகின்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என கரைச்சி பிரதேச செயலக செயலாளர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்குரிய அரச காணியை ஆக்கிரமித்துள்ள விடயம் தொடர்பில் பிரதேச செயலாளருடன் தொடா்பு கொண்டு வினவிய போது குறித்த பிணக்கு நீண்டகாலமாக காணப்படுகிறது. பாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக பிடித்து தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டு வருபவருக்கு மூன்று இடங்களில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டன.  அந்த மூன்று இடங்களும் பெறுமதியான இடங்கள். அதாவது கணகாம்பிக்குளம் இரணைமடு பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக, இரண்டாவது பொன்னகர் யாழ் பல்கலைகழக பொறியியல் விவசாய தொழிநுட்ப பீடங்கள் அமைதுள்ள பிரதேசம், மூன்றாவது கணகாம்பிக்கைகுளம் உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்கு அருகில் ஆனால் இந்த எந்த இடத்திற்கும் செல்ல மறுக்கும் அவர் ஏ9 வீதியோரமாக தன்னுடைய வியாபார நிலையத்தை நடத்துகின்ற பொருத்தமான இடமாக வழங்கினால் பாடசாலை காணியை வழங்கத்தயார் எனத் தெரிவித்து வருகின்றார்.

எனவே இது தொடர்பில் பாடசாலை சமூகமும் எமது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றன. ஆகவே அவருக்கு எதிராக அரச காணியை ஆக்கிரமித்துள்ளார் என வழக்குத் தாக்கல் செய்து பாடசாலைக்கு காணியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

#பாடசாலைக்குரிய  #அரச காணி #அடாத்தாக  #பிரதேச சபை உறுப்பினருக்கு  #கரைச்சி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More