Home இலங்கை யாழில் காவல்துறை  திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :

யாழில் காவல்துறை  திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :

by admin

காவல்துறைத் திணைக்களத்தில் நிலவும் தமிழ் காவல்துறைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு  இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.   குறித்த நிகழ்வின்போது வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு விஜயம் மேற்கொண்டு நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்தவர்களுடன்  கலந்துரையாடலில் ஈடுபட்டதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளது.

இதுவரை காலமும் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்திருந்ததும் வடக்கு ஆளுநரினால்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#யாழில்  #காவல்துறை  திணைக்களத்தின் #ஆட்சேர்ப்பு #நேர்முகத் தேர்வு #சுரேன் ராகவன்
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More