Home இலங்கை யாழ் உடுவில் பகுதியில் பெண்ணைக் கடத்த முயற்சி

யாழ் உடுவில் பகுதியில் பெண்ணைக் கடத்த முயற்சி

by admin


அலைபேசி வலையமைப்பு நிறுவனம் என்ற போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் தவறான செயற்பாடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட்ட நால்வர், இளம் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர். அதுதொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் காவல்துறையினர்;, ஒருவரைக் கைது செய்துள்ளனர். 2 பெண்கள் உள்பட மூவர் தப்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது.

உடுவில் கிழக்கு (துஃ184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகம் ஒன்று இயங்கிவந்தது. அங்கு நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களும் தங்கியிருந்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர், அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டுள்ளார். தனது பிரிவில் இயங்குவதாயின் பதிவு செய்வது கட்டாயம் என கிராம அலுவலகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தம்மை குறித்த நிறுவனத்தின் அலுவலகர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அந்த நபர்கள், காவல்துறையினருக்கு தமது நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்று கிராம அலுவலகருக்கு தெரிவித்துள்ளனர்.

அதனால் இந்த விடயம் உடுவில் பிரதேச செயலரின் கவனத்துக்க தன்னால் கொண்டு செல்லப்பட்டதாக உடுவில் கிழக்கு கிராம அலுவலக முதல்வரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் காலை உடுவில் அம்பலவாணர் வீதியில் பயணித்த இளம் பெண் ஒருவரை 2 பெண்கள், 2 ஆண்கள் இணைந்து வழிமறித்துக் கடத்த முற்பட்டுள்ளனர். அவர்களுடன் மல்லுக்கட்டித் தப்பித்த அந்த இளம் பெண், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், விசாரணைகளை முன்னெடுத்தனர். காவல்துறையினரின் வருகையை அறிந்ததும் அந்த நபர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். எனினும் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தை அடுத்து வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலர் சுன்னாகம் காவல் நிலையத்தில் குழுமி, அந்த வீட்டின் உரிமையாளர் உள்பட அனைவரையும் கைது செய்யவேண்டும் என சுன்னாகம் காவல்துறையினரிடம் கோரினார்கள்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். #உடுவில் #பெண்ணை #கடத்த #தவறான செயற்பாடுகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More