Home இலங்கை சஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…

சஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…

by admin

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஹாஷிமின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

காவற்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியோரின் அறிக்கைகளின் பிரகாரம், மொஹமத் சஹரானின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒரு உறுப்பினர் கூட, வெளியில் இல்லை என தான் உறுதிப்பட கூறுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் சஹரானின் நெருங்கிய நண்பர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சஹரானுடன் தேநீர் அருந்தியவர்களை கூட விசாரணைக்கு உட்படுத்த காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த பிரதமர் இலங்கையின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  #தவ்ஹீத்ஜமாத்அமைப்பு #பிரதமர்ரணில்விக்ரமசிங்க #காத்தான்குடி #புலனாய்வுத்துறை  #மொஹமத்சஹரான்ஹாஷிம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More