Home இலங்கை இலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :

இலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :

by admin


இலுப்பக்கடவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற்றுப்பகுதியில் வைத்து ஒரு தொகுதி பாலை மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரத்தின் சாரதி ஒருவர் இன்று திங்கட்கிழமை(24) காலை இலுப்பக்கடவை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலுப்பக்கடவை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இலுப்பக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ. சூலியத்த தலைமையிலான காவல்துறைக்குழுவினர் இன்று காலை 5.30 மணியளவில் இலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்டனர்.

இதன் போது உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட நிலையில் ஒரு தொகுதி சீவப்பட்ட பாலை மரக்குற்றிகளை மீட்டுள்ளதோடு,குறித்த உழவு இயந்திரத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.கைப்பற்றப்பட்ட பாலை மரக்குற்றிகள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பாலை மரக்குற்றிகள் இலுப்பக்கடவை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில். கைது செய்யப்பட்ட நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இலுப்பக்கடவை காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#இலுப்பக்கடவை  #சிப்பி ஆற்றுப்பகுதி #பாலைமரக் குற்றி #கைது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More