Home இலங்கை கொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை

கொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை

by admin

கொழும்பு மாவட்டத்தின் கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த  இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.    விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட  முற்றுகையின்போது பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர்  கடுவலைப் பகுதியில்  இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையத்தையே இன்று மாலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையின்போது குறித்த இடத்திலிருந்து இரண்டாயிரம் சிம் அட்டைகள் , கையடக்கத்தொலைபேசிகள் , கணினிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  மூன்று பேர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#கொழும்பில்  #இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் #முற்றுகை
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More