Home பிரதான செய்திகள் குறைந்த வயதில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த 3ஆவது வீரர் அவிஷ்க பெர்னாண்டோ..

குறைந்த வயதில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த 3ஆவது வீரர் அவிஷ்க பெர்னாண்டோ..

by admin


மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர் அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுள்ளார். அத்துடன் அவிஷ்க பெர்னாண்டோ பெற்ற முதலாவது சதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் குறைந்த வயதில் விரைவாக சதம் பெற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் அயர்லாந்து அணியின் போல் ஸ்டெர்லிங் முதல் இடத்திலும் ரிக்கி பொண்டிங் இரண்டாவது இடத்திலும் அவிஷ்க பெர்னாண்டோ மூன்றாவது இடத்திலும் விராட் கோலி நான்காவது இடத்திலும சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுக் கொண்ட இந்த சதமே நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட முதல் சதம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அணி சார்பில் 8 சதங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #அவிஷ்கபெர்னாண்டோ

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More