Home இந்தியா 100 கோடி அபராதத்தை செலுத்துமாறு மேகாலயா அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

100 கோடி அபராதத்தை செலுத்துமாறு மேகாலயா அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

by admin

தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த 100 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என மேகாலயா அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் அதிகளவான நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றமையை தடுக்க தவறியதற்காக அம்மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி ரூபா அபராதம் விதித்திருந்தது.

இதற்கு எதிப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பசுமை தீர்ப்பாயம் விதித்த 100 கோடி ரூபா அபராதத்தை செலுத்துமாறு மேகாலயா அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அங்கு சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியை அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் ஒப்புடைக்குமாறும் அந்த நிறுவனம் குறித்த நிலக்கரியை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை மாநில அரசுடன் இணைந்து அபராதமாக செலுத்துமாறும் நீதிபதிகள், வலியுறுத்தியுள்ளனர்.

தங்கள் மாநிலத்தில் ஏராளமான சட்ட விரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருவதாக மேகாலயா அரசு அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. #தேசிய பசுமை தீர்ப்பாயம் #அபராதம்  #மேகாலயா #உச்ச நீதிமன்றம் ,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More