Home இலங்கை மரணதண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

மரணதண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

by admin

மரண தண்டனையை நடைறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று குறித்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றது. குறித்த மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மனு மீதான விசாரணை நிறைவடையும்வரை, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான தகைமை இல்லை என்றும் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து மனு மீதான விசாரணைகள் இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்ட நிலையில் இன்று மனு மீதான விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரம் மரண தண்டனை விதிப்பது தார்மீகமானதல்ல எனக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர் மாலிந்த செனவிரட்னவினால் கடந்த 28ஆம் திகதி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #மரணதண்டனை #மனு  #விசாரணை #ஆரம்பம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More