Home சினிமா களவாணி 2 படத்தை வெளியிட  இடைக்காலத் தடை

களவாணி 2 படத்தை வெளியிட  இடைக்காலத் தடை

by admin


சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம்  2010ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். அத்துடன், மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை ஜூலை 5ஆம் திகதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் களவாணி 2 படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. #களவாணி  #இடைக்காலத் தடை  #விமல் #ஓவியா

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More