Home இலங்கை பூஜித் ஜயசுந்தர, பணிநீக்கம் செய்யப்படுவாரா?

பூஜித் ஜயசுந்தர, பணிநீக்கம் செய்யப்படுவாரா?

by admin

பூஜித் ஜயசுந்தரவை, பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவற்துறை மா அதிபராகப் பதவி வழங்கிய அதிகாரமிக்க அதிகாரியான ஜனாதிபதியால், அவரைப் பணிநீக்கம் செய்ய முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கில் அவர் குற்றவாளியல்லவெனத் தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் அவருக்கு காவற்துறை மா அதிபர் பதவியை வழங்கவும் முடியும் எனவும் இவ்வாறானதொரு நிலைமையில், காவற்துறை மா அதிபர் பதவியை, வேறொருவருக்கு வழங்க முடியாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் விவகாரத்தில், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றவியல் சட்டக்கோவையின் மனிதப் படுகொலைகள் மற்றும் அவற்றுக்கான உதவியை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜித் ஜயசுந்தர

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More