உலகம் பிரதான செய்திகள்

துனிசியா நாட்டில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு


துனிசியா நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து அந்நாட்டு ஜனாதிபதி பேஜி சைட் எஸ்ஸெப்ஸி உத்தரவிட்டுள்ளார். துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் செயற்பட்டு வரும் பயங்கரவாத குழுவினர் வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் காவல்துறையினர் அரச அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2015-ஆண்டு அந்நாட்டுத் தலைநகர் டுனிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இவர்கள் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்துக்கு 3 மாதங்களுக்கு பின்னர் சோசீ என்னும் இடத்தில் உள்ள கடற்கரை சொகுசு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 வெளிநாட்டினர் உள்பட 38 பேர் உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வருவதனால் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். #துனிசியா  #அவசரநிலை சட்டம் #நீடிப்பு #tunisia #emergency law

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.