Home இலங்கை பொகவந்தலாவயில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

பொகவந்தலாவயில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

by admin

பொகவந்தலாவ காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 12.07.2019 அன்று காலை பொகவந்தலாவ காவல்துறையினரினால் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ள பொகவந்தலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.#பொகவந்தலாவ #சட்டவிரோத #மாணிக்ககல் #கைது
(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More