Home இலங்கை இலங்கையில் அமெரிக்க தள விவகாரம் – இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது

இலங்கையில் அமெரிக்க தள விவகாரம் – இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது

by admin

அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கைக்கு இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை காரணமாக இந்தியாவின் தென்பகுதியில் அமெரிக்க இராணுவதளமொன்று ஏற்படுத்தப்படலாம் என குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கை எடுக்கும் முடிவை மதிக்கும் என இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளது

இலங்கையின் இறைமையை மீறும் விதத்தில் தனது நாடு எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதையும் இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை பிரதமருடன் அரசியல் மோதல்களில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கையின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளதையும் இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது #இலங்கை  #அமெரிக்க  #இந்தியா #உன்னிப்பாக #சோபா உடன்படிக்கை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More