Home இந்தியா உத்தர பிரதேசத்தில் கனமழை – 3 நாளில் 15 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் கனமழை – 3 நாளில் 15 பேர் பலி

by admin

உத்தர பிரதேசத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், கடந்த மூன்று தினங்களில் மட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் குடிசை வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளன.

இந்த 14 மாவட்டங்களிலும் கடந்த நான்கு தினங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் மழையால் 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #உத்தர பிரதேசத்தில் #கனமழை #பலி #Uttar Pradesh

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More