இந்தியா பிரதான செய்திகள்

பாரத ஸ்டேட் வங்கிக்கு 7 கோடி ரூபா அபராதம்


ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கிக்கு 7 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் 2017-ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் போது வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல் மற்றும் இயக்குதலில் நடத்தை விதிமுறைகள், பெரிய கடன் களுக்கான மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள் அளிப்பது, மோசடி அபாய மேலாண்மை, மோசடி முறைப்பாடுகள் போன்றவைகளில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது

இதன்படி பாரத ஸ்டேட் வங்கியிடம் வாய்மொழி விளக்கம் கோரப்பட்டதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் 7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #பாரத ஸ்டேட் வங்கி  #அபராதம் #ரிசர்வ்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.