Home இலங்கை வெளியாகிறது நயன்தாராவின் `கொலையுதிர் காலம்’   

வெளியாகிறது நயன்தாராவின் `கொலையுதிர் காலம்’   

by admin


தமிழ் திரையுலகில் முதன்மை கதாநாயகியாக வலம்வரும் நயன்தாரா நடித்துள்ள புதிய திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திகில் பாணியில் உருவாகியுள்ளது. `ஹஷ்’ என்ற ஹொலிவுட் திரைப்படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.  தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14ஆம் திகதி வெளியாக இருந்தது.

இதனிடையே, கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். காப்புரிமை இல்லாத தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற 26ஆம் திகதி நயன்தாராவின் கொலையுதிர் காலம் வெளியாகும் என தெரிவிகப்பட்டுள்ளது. #நயன்தாரா #கொலையுதிர் காலம் #இடைக்கால தடை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More