Home இலங்கை தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம்

தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம்

by admin

மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் 19.07.2019 அன்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு 20.07.2019 அன்றும் மரம் முறிந்து விழுந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

வெள்ளத்தினால் 9 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள்  தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 ஆண்கள், 12 பெண்கள், 23 சிறுவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடதக்கது #தலவாக்கலை  #வெள்ளம் #வெளியேற்றம்

(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More