Home இலங்கை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட செல்வரத்தினம் கவிகஜன், ஆவா குழுவைச் சேர்ந்தவரா?

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட செல்வரத்தினம் கவிகஜன், ஆவா குழுவைச் சேர்ந்தவரா?

by admin

கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்ற இளைஞனின் உறவினர், இறந்தவர்  கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த 23 வயதுடைய செல்வரத்தினம் கவிகஜன் என அடையாளம் காட்டியுள்ளார்.

இதேவேளை தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் எனவும், சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் ஒரே மகனான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

மானிப்பாய் – இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது காவற்துறையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.  இறந்தவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கும் காவற்துறையினர் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More