Home சினிமா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை 

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுப்ரமணியம்சிவாவின் வெள்ளை யானை 

by admin

சுப்ரமணியம்சிவா இயக்கத்தில் உருவாகும் ’வெள்ளை யானை’ திரைப்படத்தில் சமுத்திரகனி  நாயகனாக நடிக்கின்றார். விவசாயம் மற்றும் இயற்கை குறித்து பேசும் இந்த திரைப்படம் ஒரு மாறுபட்ட படமாக அமையும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் என்ற படங்களை இயக்கியவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். சின்ன இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை நாயகனாக வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் வெள்ளை யானை.

இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக இணையவுள்ளார் என அறிவித்துள்ளது படக்குழு. ‘மனம் கொத்திப் பறவை’ ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வைட் லாம்ப் டாக்கீஸ் சார்பில் எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார். #எதிர்பார்ப்பை #சுப்ரமணியம்சிவா #வெள்ளை யானை  #சமுத்திரகனி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More