Home இலங்கை விசேட விமானம் மூலம், இலங்கையர்களை அவுஸ்ரேலியா திருப்பியனுப்பியது…

விசேட விமானம் மூலம், இலங்கையர்களை அவுஸ்ரேலியா திருப்பியனுப்பியது…

by admin


அவுஸ்ரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை கைதுசெய்துள்ள அவுஸ்ரேலிய அதிகாரிகள் விசேடவிமானம் மூலம் அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் உள்ள விமானநிலையத்திலிருந்து விமானமொன்று இலங்கையர்களுடன் புறப்பட்டுள்ளதாக த அவுஸ்ரேலியன் தெரிவித்துள்ளது. 20 இலங்கையர்களை படகுடன் அவுஸ்ரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் குறிப்பிட்ட இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமானநிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர் அங்கிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளது என த அவுஸ்திரேலியன் உறுதி செய்துள்ளது. அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை உறுதி செய்யாத அதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய முயலும் எவரும் நாடு கடத்தப்படுவர் எனவும், அவர்கள் புறப்பட்ட இடத்திற்கு அல்லது அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைப்பதே தங்களின் நிலைப்பாடு எனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து பதிலளிப்பதில்லை என்ற கொள்கையை பின்பற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More