Home இலங்கை தென்னிலங்கை மீனவர்களை, பருத்தித்துறை முனைப் பகுதி மீனவர்கள் பிடித்தனர்..

தென்னிலங்கை மீனவர்களை, பருத்தித்துறை முனைப் பகுதி மீனவர்கள் பிடித்தனர்..

by admin

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் என குற்றம்சாட்டி தென்னிலங்கையை சேர்ந்த 26 மீனவர்களை பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த போதிலும் காவற்துறையினர் அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர்.

நீண்ட காலமாக குறித்த கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில் அது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் , அதனால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தாமே கடலில் இறங்கி சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களை பிடித்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக 12 படகுகளில் சென்ற 36 பேரை பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த போதிலும், அவர்களை காவற்துறையினர் எச்சரித்து விடுவித்துள்ளனர் எனவும் தெரிவித்தனர். இனியும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவார்கள் ஆயின் தாம் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்த மீனவர்கள் உரிய தரப்பினர்கள் அது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More