Home இலங்கை ஐநா விசேட பிரதிநிதிக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

ஐநா விசேட பிரதிநிதிக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

by admin

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி  Clément Nyaletsossi Voulé க்கும் ; ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையில் சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

வட மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஆளுனர் , ஐநா விசேட பிரதிநிதிக்கு இதன்போது விளக்கமளித்தார்.

காணியற்ற மக்களுக்கு காணிகளையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்குவதற்கு வடமராட்சி களப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் செயற்பட்டு வருவது தொடர்பில் ஆளுநர் இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.

இதேவேளை இலங்கையில் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் தடைபட்டிருந்த பாதுகாப்பு படைகளின் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிப்பது தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஆளுநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ஐநா  #விசேட பிரதிநிதி #வடக்கு ஆளுநர்  #சந்திப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More