Home இலங்கை தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்

by admin

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு,மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக இன்று திங்கட்கிழமை(29) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் மாணிக்கவாசகம் கணேசராஜா உத்தரவிட்டார்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த 6 மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர். கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை(29) குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். #தலைமன்னார்  #கடற்பரப்பில் #கைது #இராமேஸ்வர #மீனவர்களுக்கு #விளக்கமறியல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More