Home இலங்கை கௌதாரிமுனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடை   நீடிப்பு

கௌதாரிமுனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடை   நீடிப்பு

by admin

 

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடை எதிர்வரும் 6ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரிமுனைப்பகுதியில் இயற்கை வளமான மணல் தொடர்ந்;தும் முறையற்ற விதத்தில் அகழ்வது தொடர்பாக பிரதேச மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளைத்தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலும் மணல் அகழ்வு தொடர்ந்த நிலையில் இம்மாத முற்பகுதியில் பூநகரி காவல் நிலையம்முன்பாக கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்;ததையடுத்து, இரு தரப்புக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மைதொடர்பில் பூநகரிப்பொலிசார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்;தநிலையில் குறித்த மணல் அகழ்விற்;கு இன்று வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது,

குறித்த வழக்கு இன்றைய தினம் (29-07-2019) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக இளம் சட்டத்தரணிகளான சுப்பிரமணியம் சிவசூரியா, சரண்யா தாசுதன், நவரத்தினம்; பிருந்தா, கோகுலதீபன் தர்சா, ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் எடுத்தமன்று  எதிர்வரும் 6ம்திகதி வரையும் மணல் அகழ்விற்கான தடையினை நீடித்துள்ளது.  #கௌதாரிமுனை #மணல் அகழ்வதற்கான #தடை   #நீடிப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More