Home இலங்கை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்கப் போவதில்லை

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்கப் போவதில்லை

by admin


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லையெனில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்கப் போவதில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது அனைவரும் தாக்குதல் தொடர்பில் மறந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உறவினர்களை இழந்தவர்களுக்கு நீதி தேவையே அன்றி நட்டஈடு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை ஏற்பாடு செய்த, அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று வரை தண்டனை வழங்கப்படவில்லை எனவும் அரசாங்கம் மட்டும் அல்லாது எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்தவொரு அறிக்கையும் மக்களிடம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர் , எங்களுக்கு தேவை உண்மை அன்றி தேர்தல் அல்ல எனவும் அதனால் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தன்னிடம் வர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை எனவும் தான் மக்களின் கட்சி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   #ஜனாதிபதி வேட்பாளரை  #சந்திக்க #மெல்கம் ரஞ்சித் #உயிர்த்த ஞாயிறு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More