Home இலங்கை க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

by admin

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ( 05.08.2019 ) ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமாகிய இந்த பரீட்சை எதிர்வரும் 31ம் திகதி வரை நடைபெறும். நாடுபூராகவுமுள்ள 678 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

முற்பகல் 8.30 தொடக்கம் பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு ஆணையாளர் கோரியுள்ளார்.

பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது. #க.பொ.த.  #உயர்தரப் பரீட்சை #ஆரம்பம்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More