Home இலங்கை விக்னேஸ்வரனின் முடிவு சட்டவிரோதமானது – நீதிமன்றம் தீர்ப்பு

விக்னேஸ்வரனின் முடிவு சட்டவிரோதமானது – நீதிமன்றம் தீர்ப்பு

by admin


வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் பதவி நீக்கம் செய்த முறை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மகிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் இவ்வாறு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.  மேலும் இந்த வழக்கிற்காக ஏற்பட்ட செலவை மனுதாரரான ப.டெனீஸ்வரனுக்கு செலுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வட மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான ப.டெனீஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தன்னை பதவி நீக்கியமை சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற தவறியமைக்காக நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்ரம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள்ளப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது  #ப.டெனீஸ்வரனை  #விக்னேஸ்வரன்  #சட்டவிரோதமானது  #தீர்ப்பு #பதவி நீக்கம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More