Home இலங்கை நல்லூர் கந்தன் 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்…

நல்லூர் கந்தன் 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்…

by admin

வரலாற்றில் என்றுமில்லாத பாதுகாப்புடன் திருவிழா ஆரம்பம்!


யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணக் குடாநாடு 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலிலும் யாழ்ப்பாணம் நகரப் பகுதிகள், வீதிகளில் இராணுவத்தினர், காவற்துறையினர் கடும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 தினங்கள் இடம்பெறவுள்ளது. ஆலயச் சூழலில் காவற்துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆலயத்தின் பாதுகாப்பையும், ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் மூடப்பட்டு பொதுப் போக்குவரத்துக்கு தடைகள் போடப்பட்டு, மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் வழமைபோன்று செய்யப்பட்டுள்ளன.  ஆலய சூழலில் நேற்று விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பிரதேசத்தை தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆலயத்துக்கு செல்வோரைச் சோதனை செய்தவதற்கான சோதனைக் கூடங்கள் ஆலயத்துக்குச் செல்லும் நான்கு வீதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளபோதும் ஆலயச் சூழலில் பெருமளவு காவற்துறையினர், மற்றும் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் படையினர் வீதித் தடைகளை ஏற்படுத்திச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். நகரின் மத்தியில் ஸ்ரான்லி வீதி, கொழும்புத்துறை, அரியாலை, ஏ-9 வீதி, நாவற்குழிப் பகுதி போன்ற இடங்கள் உட்படப் பல இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன், அடையாள அட்டைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. விசேட அதிரடிப் படையினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆலயத்தைச் சூழ உள்ள வீதித் தடைகளில் காவற்துறையினரும், இராணுவத்தினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More