Home இலங்கை அமெரிக்காவின் பயண எச்சரிக்கை தவறாக பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது…

அமெரிக்காவின் பயண எச்சரிக்கை தவறாக பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது…

by admin


கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்துகொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.

மற்றொரு பயங்கரவாத தாக்குதல் குறித்த வதந்தி முற்றிலும் தவறானது என்று நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்றுமுன்தினம் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், அமெரிக்க தூதரகத்தின் இந்த பயண எச்சரிக்கை வழக்கமான ஒன்றே என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை குறித்த எமது பாதுகாப்பு அறிவிப்பின் மீது ஊடகங்களும் மற்றவர்களும் கவனம் செலுத்துவதை தான் புரிந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்க விடுமுறைகள் மற்றும் பெரிய பொது நிகழ்வு காலத்தில், நல்ல நடைமுறைகளைப்பற்றி, இலங்கைக்கு பயணிக்கும் மக்களுக்கு தாம் நினைவூட்டுவது வழக்கமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More