Home சினிமா தேசிய விருதை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ். மீண்டும் முக்கிய பாத்திரத்தில்

தேசிய விருதை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ். மீண்டும் முக்கிய பாத்திரத்தில்

by admin


66ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்றையதினம் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ். பெற்றுள்ளார். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி இவ்விருதைப் பெற்றுள்ளார்.  சிறந்து தெலுங்கு திரைப்படத்திற்கான மாநில விருது, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருது என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது

இந்நிலையில், தனது 20ஆவது படமான தெலுங்கில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகின்ற கீர்த்தி சுரே இப்படத்தில் மீண்டும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. .இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் தொடர்ந்து 45 நாட்களாக நடைபெற்றுள்ளதாகவும் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்தகவலை இப்படத்தின் இயக்குநர் நரேந்திர நாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார். ‘கீர்த்தி 20’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்.   #தேசியவிருது #கீர்த்தி #சுரேஷ்  #சாவித்திரி ,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More