Home இலங்கை “நான் செய்வேன் என்பவரை அல்ல, செய்து காட்டியரை கொண்டு வந்திருக்கிறேன்”

“நான் செய்வேன் என்பவரை அல்ல, செய்து காட்டியரை கொண்டு வந்திருக்கிறேன்”

by admin

“என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்”

வெறுப்பின் மூலம் தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு விடயத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டில் உள்ள அனைவரும் ஜாதி, மதங்களுக்கு உட்படாமல் ஒன்றாக இருக்கக்கூடிய கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு காரணமாக இருந்த பசில் ராஜபக்ஸவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாள் வராமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் செயற்பட்டதாகவும் ராஜபக்ஸ குடும்பத்தை அரசியலிற்கு வராமல் இருக்க செய்வதற்காக அரசியலமைப்பை மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அவ்வாறான விடயங்களை செய்து தமது சுதந்திரத்தை பறித்தாகவும், நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சுதந்திரத்தை அர்ப்பணிப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்துகுறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை எனவும், வெறுப்பினூடாக அரசியலை எடுத்து செல்ல முடியாது என்பது தற்போது தீர்மானமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெறுப்பை முன்னெடுத்து செல்ல அரசியலிற்கு வரவில்லை எனவும் தன்னை நேசிக்கும் மக்களிற்காக மாத்திரமே வருவதாகவும் அவர் கூறியுள்ளார்..

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட்டதாகவும், 2015 ஆம் ஆண்டின் பின்னர் சிறிகொதவின் நிழல் கட்சியின் மீது விழுந்ததினால் நாட்டை நேசிப்பவர்களுக்கு அந்த இடத்தில் இருக்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் குப்பை கூழங்களில் துர்நாற்றம் வீசும் போதும்,  கொச்சிக்கடையில் இருந்து மட்டக்களப்பு வரையில் குண்டுகள் வெடித்த போதும் மக்களுக்கு தங்களை நினைவுக்கு வந்ததாகவும் தெரிவித்த அவர், இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவானதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மதத்தினருக்கும் தனது வணக்கஸ்தலங்களுக்கு செல்லக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை என்று எண்ணக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

365 நாட்களும் நாட்டை பாதுகாக்க கூடிய ஒருவர் நாட்டிற்கு தேவை எனவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், நான் செய்வேன் என்று செல்லும் ஒருவர் அல்லாமல் செய்து காட்டிய ஒருவரை கொண்டு வரவேண்டும் எனவும், மக்களை ஏமாற்றாத ஒருவர் வேட்பாளராக ​வேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அன்று ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இன்று அரசியல் எனும் வார்த்தையை வெறுப்பதாகவும், நாட்டை நேசிக்கும் ஒருவரை மக்கள் வேண்டிக் கொள்வதாகவும், தன்னுடைய விருப்பத்தை விடவும் நாட்டின் விருப்பமே தனக்கு முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கூறியவற்றை அவதானத்திற் கொண்டு புதிய ஒருவரை தேடியதாகவும், தான் தெரிவு செய்யாவிடினும் கோத்தாபய ராஜபக்ஸ உங்களது சகோதரர் ஆகிவிட்டதாகவும் கூறிய  அவர்   கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியுள்ளாதாவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் “என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் கோத்தாபய ராஜபக்ஸ  தன்னை ஜனாதிபதியாக்குமாறு எப்போதுமே கேட்டுக் கொள்ளவில்லை எனவும் உங்களை வலுப்படுத்துவதற்காக அன்றி கோத்தாபய ராஜபக்ஸவை வலுப்படுத்தவதற்காக அவரை நியமிக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More