Home இந்தியா சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…

சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…

by admin


சிதம்பரத்தின் டெல்லிவீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்கு கதவு திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று  அவரைக் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் சட்டத்தரணிகள்  அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரும் சென்றனர்.

ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிதம்பரம் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர்.  அத்துடன் காங்கிரஸ் தொண்டர்களும் கூடியதால் அங்கு சிறிது  பதட்டம்  ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More