Home இலங்கை வழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…

வழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…

by admin

ஜனவரி 2009ல் லசந்த விக்கிரமதுங்க  சட்டத்துக்கு புறம்பான வகையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலிபோனியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகள் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இக் குற்றச்சாட்டை மறுப்பதுடன் இக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்கின்ற பட்சத்திலும் கூட இராஜதந்திரி என்ற ரீதியில் வெளிநாட்டு அலுவலர் சலுகை அடிப்படையில் இவ் வழக்கை அணுக வேண்டும் என கோத்தபாயவின் சட்டத்தரணிகள் நீதி மன்றத்தை கேட்டுள்ளனர்.

இக் குற்றச்சாட்டின் முறைப்பாடு உண்மையாக இருக்கும் என்ற ஊகத்தில் கூட இவ் வழக்கில் சட்டப்பூர்வ ஆதாரப்பற்றாக்குறை இருப்பதாக கோத்தாபய ராஜபக்ஸவின் சட்டதரணிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில் இலங்கையர்கள் இவ் வழக்கை உன்னிப்பாக அவதானித்து வரும் வேளையில் கோத்தாபய ராஜப்கஸ இக் கருத்தை நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை இக் குற்றச்சாட்டை கோத்தாபய ராஜபக்ஸ வன்மையாக மறுப்பதாகவும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்ஷா விக்கிரமதுங்க தொடுத்துள்ள இவ் வழக்கில் இலங்கையின் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய  ராஜபக்ஸ அதிகார மட்டத்திலேயே இதனை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ் வழக்கில் பொது சட்ட வெளிநாட்டு அலுவலர் சலுகையின் கீழ் விசாரித்து இவ் வழக்கை தள்ளுப்படி செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபயவின் சட்டத்தரணிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More