Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான, கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில்…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான, கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில்…

by admin

https://www.facebook.com/KuruparanNadarajah/posts/2428752587362228

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகிய இன்று வெள்ளிக்கிழமை (30) மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டச் சஅயலக்ததிற்கு முன் குறித்த போராட்டம் காலை 10 மணியளவில் ஆராம்பமானது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்ததின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு அரசாங்கம் யுத்தம் நிறைவடந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் உரிய தீர்வு வழங்காத நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் , பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்  போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள், உறவினர்கள் அருட்தந்தையர்கள், மத குருக்கள், சமூக ஆர்வளர்கள , மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.

போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நிலைமாறுகால நீதி எங்கே? இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சையம் உண்மை வெளி வரும்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா, உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இரானுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியவாரு கண்ணீருடன் போரட்டத்தில் கலந்து கொண்டனர்.போராட்டத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More