Home இலங்கை நல்லூர் கந்த சுவாமி ஆலய நகைத் திருட்டு – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை…

நல்லூர் கந்த சுவாமி ஆலய நகைத் திருட்டு – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை…

by admin

நல்லூர் கந்த சுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களின் நகைகளைத் திருடி இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டை உரிய முறையில் முன்வைக்க காவற்துறையினர் தவறியதால் சந்தேகநபர்களை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வியாழக்கிழமை தேர்த் திருவிழா இடம்பெற்றது. அதில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதன்போது இருபதுக்கும் மேற்பட்டோரிடம் நகைகள் அபகரிக்கப்பட்டிருந்தன. சுமார் 45 தங்கப் பவுண் நகைகள் திருட்டுப் போயிருந்தன என முறைப்பாடுகள் கிடைத்ததாக காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்தத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் முழங்காவிலைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் என காவற்துறையினர் மன்றுரைத்தனர். சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காவற்துறையினரின் கைதுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார் இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல், சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன் வழக்கை ஒத்திவைத்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More