Home இலங்கை வெலிங்டன் தோட்டத்தில் சடலங்களை தோண்டி மண்டை ஓடுகள் எடுப்பு :

வெலிங்டன் தோட்டத்தில் சடலங்களை தோண்டி மண்டை ஓடுகள் எடுப்பு :

by admin


ஹட்டன் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்தோட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெலிங்டன் தோட்டத்தில் நபர் ஒருவர் இன்று ( 01.09.2019 )காலை புல்லு வெட்டுவதற்காக அப்பகுதிக்கு வசென்றிருந்த நிலையில் சடலங்கள் தோண்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பில் ஊர் மக்களுக்கும் அறிவித்த அந் நபர் ஹட்டன் காவல்துறையினரிள்; கவனத்திற்கும் கொண்டு சென்றதனையடுத்து ஹட்டன் காவல்துறையினர் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 24, 68, 70 ஆகிய வயதுகளுடைய உடலங்களில் எச்சங்கள் அங்கிருந்து எடுத்து கொண்டு சென்றுள்ளதாகவும், அனேகமாக மண்டை ஓடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் ஒரு சடலம் புதைக்கப்பட்டிருந்த குழியை தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். #வெலிங்டன்  #சடலங்களை #மண்டை ஓடுகள்
(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More