Home இந்தியா காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மேதா பட்கரின் உடல்நிலை பாதிப்பு

காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மேதா பட்கரின் உடல்நிலை பாதிப்பு

by admin


நர்மதா அணை விவகாரம் தொடர்பாக இடம் மாற்றப்படுபவர்களின் நிலையை எடுத்துக்கூறும் விதமாக கடந்த ஓகஸ்ட் 25ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்ற சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரின் உண்ணாவரதப் போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை எட்டாவது நாளை எட்டியுள்ளது

நர்மதா நதிக்கரை அருகே வாழ்ந்துவரும் 32,000 பேர் அந்த இடத்தில் அகற்றப்படுவார்கள் என்பதற்காக அவர்களுக்காக போராடிவரும் நர்மதா சுனாட்டி அந்தோலன் இயக்கம் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளது.
இந்தநிலையில் மேதா பட்கர் மற்றும் அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியப்பிரதேசம் மாநிலம் பட்வானி மாவட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

பட்வானி மாவட்டத்தின் சிரேஸ்ட அரசு அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிட மேதா பட்கரிடம் கோரிக்கை விடுத்த போதும் தனது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், அவர் போராட்டத்தினை கைவிட அவர் மறுத்துவிட்டார். மேலும் இந்த உண்ணாவிரதப்போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததனையடுத்து அவருக்கு சனிக்கிழமை நீர் வழங்கப்பட்டுள்ளது

கடந்த 34 ஆண்டுகளாக சர்தார் சரோவர் அணைக்கு எதிராக நர்மதா பச்சோ ஆந்தோலன் இயக்கம் சார்பாக அந்த பகுதியில் இருந்து அகற்றப்படும் மக்களுக்காக மேதா பட்கர் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மேதா பட்கரின் உடல்நிலை பாதிப்பு#காலவரையற்ற #உண்ணாவிரதம் #மேதாபட்கரின் #உடல்நிலை #பாதிப்பு #நர்மதாஅணை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More