Home உலகம் கலிபோர்னியாவில் சொகுசு படகில் தீ விபத்து – 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்…

கலிபோர்னியாவில் சொகுசு படகில் தீ விபத்து – 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்…

by admin

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தீவு ஒன்றில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சன்டாகுரூஸ் என்ற தீவை சுற்றிலும் அழகிய கடல் பரப்பு அமைந்துள்ளதால் கடலில் அடியில் உள்ள பவளப்பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை காண்பதற்காக பலர் சிறு படகுகளில் அங்கு சென்று வருகின்றனர்;.  அத்துடன் அவர்கள் கடலின் அடி ஆழத்தில்மூழ்கி செய்யப்படும் ஸ்கூபா டைவிங் எனப்படும் நீச்சல் முறையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் சன்டாகுரூஸ் தீவு பகுதியில் உள்ள கடலில் ஸ்கூபா டைவிங் நீச்சல் செய்வதற்கான நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையடுத்து பணியாளர்கள் உள்பட மொத்தம் 38 பேர் கொண்ட குழு ஒன்று சன்டாகுரூஸ் தீவில் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு படகில் சென்றிருந்தனர்.

இந்நிலையில், நீச்சல் குழுவினர் சன்டாகுரூஸ் தீவு அருகே நிறுத்தப்பட்டிருந்த படகில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகில் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடலோரக்காவல் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று படகில் பரவிய தீயை அணைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.

மேலும் படகில் சிக்கிய 5 பேர் மீட்டுள்ளனர். எனினும் இந்த தீ விபத்தில் சிக்கிய மேலும் 33 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுக்கிறது. மேலும், படகில் பற்றியுள்ள தீயை அணைக்க மீட்புக்குழுவினர் போராடிவருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More