Home உலகம் உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில், பாங்கொக் நகர் முதல் இடம் பெற்றது.

உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில், பாங்கொக் நகர் முதல் இடம் பெற்றது.

by admin

உலகின் தலைசிறந்த 10 சுற்றுலா நகரங்கள் எது? என்று ஆராய 200 நகரங்களை இலக்காக கொண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக், தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டிற்கு 2 கோடியே 28 லட்சம் சுற்றுலா பயணிகள்  செல்கிறார்கள்.

2 மற்றும் 3-வது இடத்தை பாரீஸ் மற்றும் லண்டன் நகரங்கள் தம்வசப்படுத்தி உள்ளன. இங்கு ஆண்டிற்கு தலா 1 கோடியே 91 லட்சம் சுற்றுலா பயணிகள் செல்கிகிறார்கள். இதன்தொடர்ச்சியாக டுபாயில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டிற்கு 1 கோடியே 59 லட்சம் ஆக இருக்கிறது. நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை தென்கிழக்கு ஆசிய நகரங்களான சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் பிடித்து உள்ளன. மேலும் நியூயார்க், இஸ்தான்புல், டோக்கியோ மற்றும் ஆந்தாலியா போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்கள் என முதல் பத்து இடங்களில் இணைந்து உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 200 நகரங்களில் சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை 76 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. பாங்கொக்  முதலிடத்தில் இருந்தாலும், தாய்லாந்து நாட்டில் மற்ற சுற்றுலா தலங்களில் மக்களின் வருகை 1.03 சதவீதமாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 0.89 சதவீதம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More