Home இலங்கை காரைதீவில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் மீட்பு

காரைதீவில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் மீட்பு

by admin

காரைதீவில் எரிந்த நிலையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை(7) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-

பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி திடீரென எரிந்த நிலையில் சடலமாக தரையில் வீழ்ந்த நிலையில் அலறியுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கதிர்காமத்தம்பி வீதி நடேஸ்வரராஜன் அக்ஸயா (வயது-17) என்பவர் ஆவார்.

சம்பவம் இடம்பெற்ற வேளை தாய் தந்தை எவரும் வீட்டில் இருக்கவில்லை.குறித்த மாணவியின் சகோதரர் மாத்திரமே இந்த சம்பவத்தை முதலில் அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நேரத்தில் பரவியிருந்த தீயினை அயலவர்களின் உதவியுடன் அணைத்ததாக அங்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கா.போ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை காவல்துறையினர் மின்னொழுக்கினால் தீ பரவியதா அல்லது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  #காரைதீவில்  #எரிந்த #மாணவி #சடலம்

பாருக் ஷிஹான்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More