Home இலங்கை யாழ்ப்பாணம் இலங்கையின் பிரதான இடம் – நல்லூரைப் போல் மாநகரசபை மண்டபம் கம்பீரமாக உருவாகும்…

யாழ்ப்பாணம் இலங்கையின் பிரதான இடம் – நல்லூரைப் போல் மாநகரசபை மண்டபம் கம்பீரமாக உருவாகும்…

by admin

இலங்கையில் உள்நாட்டு போரினால் யாழ்ப்பாணமே அதிகமாக பாதிப்படைந்தது.  இதே யாழ்ப்பாணம் இன்னும் சில வருடங்களில் இலங்கையின் சுற்றுலா வலயமாக மாறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு சென்ற  பிரதமர் யாழ்.மாநகர சபை மண்டபத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த பின்னர் உரையாற்றிய  அவர்,  யாழ்ப்பான மாநகர சபை மண்டபம்  கலை,கலாசார அம்சங்களுடம் மிகவும் அழகான தோற்றத்தில் அமையும். யாழ்ப்பணத்தில் நல்லூர் கந்தன் ஆலயம் எவ்வாறு அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றதோ அதே போல இந்த கட்டிடமும் அமையும். இது வெறுமனே கட்டிடம் அல்ல யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திருப்பு முனையில் ஆரம்ப வேலைத்திட்டமே.

யாழ்ப்பாணம் எண்பது இலங்கையிலேயே முக்கியமான இடமாக கூறப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களின் கேந்திரம் நல்லூர் என்றே கூறவேண்டும். நாம் யாழ்ப்பணத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் இந்த ஆட்சியிலேயே முன்னெடுக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு  ஆரம்பத்தில் கூறி வந்த சிலர் மௌனமாக உள்ளனர். அபிவிருத்தியில் படிப்படியாக முன்னேறி பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம்  இப்போது முன்னெடுத்து வருகிறது.

பலாலி விமான நிலையம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. அதனை பலாலி விமான நிலையம் என்று கூறுவதை விட யாழ்ப்பாண விமான நிலையம் என்று கூறலாம். இந்த விமான நிலையத்தில் இருந்து ஆரம்பத்தில் இந்தியாவிற்கான விமான சேவைகள் இடம்பெற்றாலும் கால போக்கில் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்படும்.

யாழ்ப்பணத்தில் விமான சேவைகள் இடம்பெற்றால் சுற்றுலாத்துறை அதிகரிக்கும். குறிப்பாக யாழ்ப்பாணம் சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் அடையும். அதற்கு இங்குள்ள தீவுப் பகுதிகளை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என ஆராயப்படுகிறது. எதிர்காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாணம் சுற்றுலா வலயமாக மாறும். அத்துடன் அங்கு பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்க காங்கேசன்துறை துறைமுகம்  அபிவிருத்தி செய்யப்படவுள்ள, சீமெந்து தொழிற்சாலை  மீள இயக்கப்படவுள்ளது.

குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனையும் அதிகமாக உள்ளது. அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். இங்குள்ள கடற்தொழிலார்கள் கடற்கரை பகுதிகளில் மட்டும் சென்று தொழில் செய்கின்றனர். அவர்கள் நவீன முறைக்கு மாற வேண்டும். ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More